புதுக்கோட்டை,மே 14: புதுக்கோட்டை நெல்லுமண்டிதெரு புவனேஸ்வரி ஜுவல்லர்ஸ் அதிர்ஷ்ட அட்சய திருதியை சிறப்பு குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்பட்டது. அதிர்ஷ்ட அட்சய திருதியை சிறப்பு விற்பனையை முன்னிட்டு நெல்லுமண்டிதெரு புவனேஸ்வரி ஜுவல்லர்ஸில் ஏராளமான பரிசுகள் வழங்கபட்டது.கடந்த ஏப்ரல்மாதம் 21ம் தேதி 39-ம் ஆண்டு தொடக்கவிழாவை ஜெயலட்சுமி சோமசுந்தரம் ஆச்சாரியார் குத்துவிளக்கு ஏற்றி அதிர்ஷ்ட அட்சய திருதியை சிறப்பு முன்பதிவை தொடங்கி வைத்தார்.
இதில் ஸ்லோகன் சொல்லுங்கள் ஸ்கூட்டி வெல்லுங்கள் சிறப்பு குலுக்கலில் தேர்வு செய்யப்படும் அதிஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் இரண்டாம் பரிசாக ஐந்து லிட்டர் குக்கர் 10 பேருக்கு மூன்றாம் பரிசாக ஹாட் பாக்ஸ் 5பேருக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது .அதன்படி சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியை சேர்ந்த மேகலா முத்துக்குமார் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஹீரோ ஸ்கூட்டி (ப்ளசர் பைக்) வழங்கப்பட்டது . அதன்படி அதன் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் ஸ்கூட்டியை வழங்கி அட்சய திருதியை பரிசு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.